தேவையான பொருட்கள்:
தக்காளி
சின்ன வெங்காயம்
பச்சைமிளகாய்
பட்டை -1
கிராம்பு-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்
புதினா
கருவேப்பிலை
கொத்தமல்லிதழை
மஞ்சள்தூள்
உப்பு
சாதம்

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,பட்டை, கிராம்பு தாளிக்கவும் .
அதனுடன் வெங்காயம் ,பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,புதினா, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
வதக்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும் .
எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை வதக்கி அதனுடன் வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும் மேலே கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும். .சுவையான தக்காளி சாதம் ரெடி



தேவையான பொருட்கள்:

பேரீட்சை பழம் (விதை நீக்கியது )
உலர் திராட்சை
வெல்லம்
உப்பு
சிவப்பு மிளகாய்த்தூள் -1/2tsp
கரம் மசாலா பவுடர் -1/2tsp
புளிகரைசல்
சீரகம் -1/2tsp

செய்முறை:
பேரீட்சை பழம்,உலர் திராட்சை ,சீரகம் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் .
குறைந்த தீயில் வைத்து அதனுடன் புளிகரைசல் மீதி இருக்கும் பேரீட்சை பழம் சேர்க்கவும்.
அதனுடன் சிவப்பு மிளகாய்த்தூள் ,உப்பு, கரம் மசாலா,துருவிய வெல்லம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.
நன்றாக வெந்தவுடன் ஆற விட்டு அரைத்து கொள்ளவும் .

Category: 0 comments

ஸலாம் கூறுவதின் சிறப்புகள்



ஸலாம் கூறுவதின் சிறப்புகள்

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி),
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி 6236''
இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
 (நூல்: புகாரி, முஸ்லிம்)
அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுதல்
அல்லாஹ் கூறுகிறான் :"உங்களுக்கு வாழ்த்துக் கூறப் பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்"
(அல்குர்ஆன் 4 : 86)
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிம்முக்கு செய்ய வேண்டிய கடமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்­ம் மற்றொரு முஸ்­முக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை ஸலாமுக்குப் பதிலுரைப்பது. நோயாளியை நலம் விசாரிப்பது. ஜனாஷாவை பின் தொடர்வது. விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. துமமுபவருக்கு பதிலுரைப்பது ஆகியவை ஆகும்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி (1240)
முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
”நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் ”(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் ”(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521)
‘ஸலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -
நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)
ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, 5175
’நீங்கள் இறை விசுவாசம் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தும் வரை, நீங்கள் இறை விசுவாசிகளாக ஆக முடியாது. நீங்கள் எதைச் செய்தால் அன்பு செலுத்திக் கொள்வீர்களோ,அதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) உங்களுக்கிடையே ஸலாம் கூறுவதை பரப்புங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம், ரியாளுஸ்ஸாலிஹீன் 848
’மனிதர்களே! ஸலாம் கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுஙகள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லா இப்னு ஸலாம்(ரலி)(ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849)
வீடுகளில் நுழையும் முன் ஸலாம் கூறுவதன் அவசியம்: -
அல்லாஹ் கூறுகிறான்: -"நீங்கள் உங்கள் இல்லங்களில் நுழையும் போது, அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்ட அருள் மிகு நல்வாழ்த்தை(அமைதியை) கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் தமது வசனங்களை நீங்கள் விளங்கி கொள்வதற்காக உங்களுக்கு தெளிவாக்கியுள்ளான்.
 - (அல்குர்ஆன் 24 : 61)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
- (அல்குர்ஆன் 24 : 27)
”மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) 
நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861
”நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.”
அறிவிப்பவர் : அனஸ் (ரலி­)
நூல் : புகாரி (6244)
ஸலாம் கூறுவதில் முந்திக் கொள்பவரே சிறந்தவராவார்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் அவர்களில் முத­ல் ஸலாம் கூறுபவரே ஆவார்”
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி­) 
நூல் : அபூதாவூத் (4522)
”இறைத்தூதர் அவர்களே! இரண்டு மனிதர்கள் சந்தித்தால் அவ்விருவரில் எவர் ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பது? என்று கேட்கப்பட்டது. ”அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக நல்ல தகுதியானவரே (ஸலாம் கூறுவதை ஆரம்பிப்பார்)” என நபி(ஸல்) பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) 
நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன் 858
''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூ அல் அன்ஸாரி (ரலி­) 
நூல் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூத்
''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) 
நூல் : அபூ தாவூத்
சந்திக்கும் போது முஸாஃபஹா செய்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”இரண்டு முஸ்­ம்கள் சந்தித்து முஸாஃபஹா செய்தால் அவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னால் அவர்களுடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி­) நூல் : திர்மிதி (2651)சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தல்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்தோடு சந்திப்பது உட்பட நற்காரியங்களில் எதனையும் இழிவாகக் கருதிவிடாதே”
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) 
நூல் : முஸ்லி­ம் (4760)
ஸலாம் கூறுவதின் முறைகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும் , சிறுகுழுவினர் பெருங்குழுவினருக்கும் (முத­ல்) ஸலாம் சொல்லட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) 
நூல் : புகாரி (6231)
சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்
அனஸ் (ரலி­) அவர்கள் சிறுவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் கூறினார்கள்
நூல் : புகாரி ( 6247 )
அலைக்கஸ் ஸலாம் என்று கூறுவது கூடாது
” நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அலைக்கஸ் ஸலாம் யாரசூலல்லாஹ்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ” அலைக்கஸ் ஸலாம் ” என்று கூறாதே. ஏனென்றால் ” அலைக்கஸ் ஸலாம் ” என்பது இறந்தவர்களின் ஸலாம் ஆகும் ” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸýலைம் (ரலி­)
 நூல் : திர்மதி (2646)
யூதர்களைப் போல் ஸலாம் கூறுதல் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது (வார்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) மூலமும். சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி­)
நூல் : அஸ் ஸýனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92
தூரத்தில் உள்ளவர்களுக்கு கைகளால் சைக்கினை செய்து மெதுவாக ஸலாம் கூறுதல்
பெண்களில் சிறுகூட்டத்தினர் பள்ளிவாச­ல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி­) 
நூல் : திர்மிதி (2621)
ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் தன்னுடைய சகோதரரை சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறட்டும். அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, அல்லது சுவரோ அல்லது கல்லோ குறுக்கிட்டு பிறகு அவரைச் சந்தித்தாலும் மீண்டும் அவருக்கு ஸலாம் கூறட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)
நூல் : அபூ தாவூத் (4523)
மேற்கண்ட ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனத்தி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1. இஸ்லாத்தில் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதாகும்.
2. ஒரு முஸ்­ம் மற்றொரு முஸ்­முக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றும் ஸலாம் கூறுதலாகும்.
3. ஒரு சகோதரரை சிரித்த முகத்துடன் சந்திப்பதும். நற்காரியங்களில் உள்ளதாகும்.
4. முஸாஃபஹா என்பது ஒருவரைச் சந்திக்கும்போது அவருடைய வலது கரம் பற்றுவதாகும். ஒரு கையினால் மட்டுமே முஸாஃபஹா செய்ய வேண்டும். இரு கரம் பற்றிக் குலுக்குவது நபி வழிக்கு மாற்றமானதாகும்.
5. இருவர் சந்திக்கும் போது முத­ல் ஸலாம் கூறுபவரே இறைவனிடத்தில் நெருக்கத்திற்குரியவராவார்.
6. நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு ஸலாம் கூறுவதினால் கிடைக்கும் நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
7. சிறியவர் பெரியவருக்கும் , நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும் சிறிய கூட்டம் பெரிய கூட்டத்திற்கும் ஸலாம் கூறவேண்டும். ஒரு கூட்டத்தாரின் சார்பாக ஒருவர் மட்டுமே ஸலாம் கூறினால் போதுமானதாகும். ஒரு கூட்டத்தாருக்கு ஸலாம் கூறப்படும் போது அவர்களின் சார்பாக ஒருவர் மட்டும் பதில் ஸலாம் கூறினால் போதுமானதாகும். பெரியவரும் சிறியவருக்கு ஸலாம் கூறலாம்.
8. ஒவ்வொரு சந்திப்பிற்கும் ஸலாம் கூறுவது சிறப்பிற்குரியதாகும்.
9. ”அஸ்ஸலாமு அலைக்க” என்று கூறுவது கூடாது., இது இறந்தவர்களுக்குரியதாகும்.
10. வார்த்தைகள் இல்லாமல் ஒருவரைச் சந்திக்கும் போது முன்கைகளாலும் தலையைத் தாழ்த்தியும் சைக்கினையின் மூலமும் ஸலாம் கூறக்கூடாது. இது யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரம் ஆகும்.
11. தூரத்தில் உள்ளவர்களுக்கு ”அஸ்ஸலாமு அலைக்கும் ” என்று வார்த்தைகளைக் கூறி கைகளை அசைத்து ஸலாம் கூறலாம்.
12. ஒருவருக்கு ஸலாம் கூறும் பொழுது அவருக்கு மற்றொரு முறை ஸலாம் கூறலாம். இவ்வாறு மூன்று முறை கூறிக்கொள்ளலாம்.எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!!!

Category: 0 comments

அண்டை வீட்டாருடன்



அண்டை வீட்டாருடன்


பெருமதிப்பிற்குரிய எனதருமை சகோதரர்களே நமது வீட்டிற்கு அக்கம் பக்கம் வசித்து வரும் அண்டை வீட்டாருக்கு நம்மால் முடிந்த அளவு நன்மையான விஷயங்களில் உதவிகளை புரிவோம் இன்றைய இயந்திர காலத்தில் அவரவர் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு நகர்புற வாழ்க்கை வாழ்கிறோம் பக்கத்து வீட்டார் யார் எவரென்று தெரிந்து பழக விரும்புவதில்லை திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்:

“மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” 


அண்டை வீட்டாருக்குத் தொல்லைத் தருவது விலக்கப்பட்ட காரியமாகும். காரணம் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய உரிமைகள் கடமைகள் மகத்தானவை. அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான், அவன் முஃமினாக மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் தூதரே! யார் அவன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எவனுடைய தொல்லைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் நிம்மதியாக இல்லையோ அவனே!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.(புகாரி)

ஒருவர் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொள்கிறார் என்பதற்கு, அவரைப் பற்றி அண்டை வீட்டார் புகழ்ந்துரைப்பதை அல்லது இகழ்ந்துரைப்பதை அளவுகோலாக நபி (ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல முறையிலோ அல்லது தீய முறையிலோ நடந்து கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ நல்ல முறையில் நடந்து கொண்டாய் என உன்னுடைய அண்டை வீட்டார் கூறுவதை நீ செவியேற்றால் நீ நல்ல முறையில் நடந்து கொண்டவனாவாய். நீ தீய முறையில் நடந்து கொண்டாய் என உனது அண்டை வீட்டார் சொல்வதை நீ கேள்விப்பட்டால் நீ தீய முறையில் நடந்து கொண்டவனாவாய்’ என்று கூறினார்கள். (அஹ்மத்)

அண்டை வீட்டாருக்கு தொல்லை தருதல் என்பதற்கு பல முறைகள் உள்ளன. அவற்றுள் சில: அண்டை வீட்டாருடன் இணைந்த பொதுச் சுவரில் ஒரு கட்டையை நடுவதைத் தடுத்தல், சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் அவருக்குத் தடுக்கும் வண்ணம் அவரின் அனுமதியின்றி கட்டிடத்தை உயர்த்திக் கட்டுதல், அவர் வீட்டுக்கு நேராக ஜன்னலைத் திறந்து வைத்து அதன் வழியாக அவருடைய வீட்டின் தனிப்பட்ட விஷயங்களை – நிகழ்ச்சிகளை எட்டிப் பார்த்தல், தட்டுதல், கத்துதல் போன்ற இடையூறு தரும் சப்தங்களால் அவருக்குத் தொல்லை தருதல் – குறிப்பாக தூங்கக்கூடிய மற்றும் ஓய்வெடுக்கக்கூடிய நேரங்களில், அல்லது அவருடைய குழந்தையை அடித்தல், அவருடைய வாசலில் குப்பையை வீசுதல் போன்றவற்றால் அவருக்குத் தொல்லைகள் தருதல்.

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.புஹாரி :6014 

அக்கம்பக்கம் இருக்கும் பெண்களுக்குள் சண்டை சச்சரவு வந்துவிட்டால் இருதரப்பினரும் கொச்ச வார்த்தைகளினால் திட்டிக்கொள்வார்கள் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உனதுவீட்டு கல்யாணத்துலே எவ்வளவோ மொய் வைத்துள்ளேன் என்று சொல்லிக்காட்ட மறுதரப்பு உன்னோட பிச்சக்காரகாசு எனக்கெதுக்கு என்று சொல்லி மொய் பணத்தையும் திருப்பிக்கொடுத்த சம்பவமும் உண்டு.

முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம் : புகாரி)

அபூதரே! நீ குழம்பு சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவணித்துக் கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் :முஸ்லிம்)

“முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக நினைத்துக் கொடுக்காமல் இருக்க வேண்டாம். சிறதளவு இறைச்சி ஒட்டிக்கொண்டிருக்கும் எலும்புத்துண்டாயினும் சரியே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

சில வீடுகளில் அண்டை வீட்டாருக்கான வேலியின் அளவு கூடகுறைய இருந்தாலும் அதுக்காக கோர்ட் கேசுயென அலைந்துக்கொண்டிருப்பார்கள் விசாரித்தால் அல்ப்பத்திலும் அல்ப்ப விஷயமாக இருக்கும் ஆனால் இடத்துக்கான மதிப்பைவிட அதிகம் சிலவு செய்தாலும் பரவாயில்லை விட்டுக்கொடுக்க முடியாதுயென அடம் பிடிப்பவர்களை பார்க்கிறோம்.

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். 

எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' எனக் கூறினார்கள்" என்றார்கள்.


அண்டை வீட்டாரை நேசிப்பது கடமை



நபி (ஸல்) கூறினார்கள்:- எவரொருவர் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டிருப்பாரோ அவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தவும், மேலும் எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டிருப்பாரோ அவர் தமது அண்டை வீட்டாரை துன்புறுத்தாமல் இருக்கவும், இன்னும் அவர் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் ஈமான் கொண்டிருப்பாரோ அவர் பேசுவதாயின் நல்லதையே பேசட்டும்! இல்லையேல் மெளனமாக இருந்து விடவும்! வேறெரு அறிவிப்பில் அவர் இரத்த பந்த உறவை ஆதரித்து நடக்கட்டும்! அறி: அபூஹுரைரா (ரலி) நூல்: மிஷ்காத்

மேற்கூறப்பட்ட நபி மொழியில் விருந்தினர் உபசரிப்பதும், அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தும்படி எடுத்தியம்புகிறது. அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கு பற்ற வேண்டும். நோய் வாய்ப்புற்றால் சென்று பார்க்க வேண்டும். உணவுகள் சமைத்தால் அதனைத் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள்: அண்டை வீட்டாரின் மீது என்ன கடமை இருக்கிறது என்பதை அறிவீர்களா? அவர் உம்மிடம் உதவி தேடினால் அவருக்கு உதவி செய்க.

அவர் கடன் கேட்டால் அவருக்கு கடனைக் கொடுக்கவும், அவர் தேவைப்பட்டவராக இருப்பின் அவருக்கு ஒத்தாசை புரிக! அவர் நோய் வாய்ப்பட்டால் அவரை நோய் விசாரிக்க செல்லுக! அவர் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்லுக! மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடைபெற்றால் அவருக்கு நல் வாழ்த்து கூறுக! ஒரு கால் துன்பம் விளைந்துவிட்டால் அவரை தேற்றுக. அவரது அனுமதி பெறாது அவருடைய வீட்டைக் காட்டிலும் உமது வீட்டை உயர்த்திக் கட்டாதீர்.

அதனால் அவருக்கு காற்று தடைபட்டுப் போகும். ஏதேனும் பழம் வாங்கினால் நீர் அவருக்கும் அதனை வெகுமதியாகக் கொடுத்து அனுப்புக!

அது உம்மால் முடியாமல் போனால் அப்பழத்தை அவர் பார்க்காத முறையிலும் உம்முடைய குழந்தைகள் வெளியே கொண்டு செல்லாமல் இருக்கும் முறையிலும் அதனை மறைவாக வீட்டிற்கு எடுத்துச் செல்லுக! இதனால் அண்டை வீட்டுப்பிள்ளைகள் அதனைக் கண்டு ஏங்கக் கூடாது. இன்னும் உமது வீட்டுப் புகையினால் அவருக்கு துன்பம் சேர்க்காதீர்.

அது தவிர்க்க முடியாதென்றால் எது சமைக்கப்பட்டதோ அதில் அவருக்கு ஒரு பங்கை நிர்ணயித்து கொடுத்து அனுப்புக. எவனுடைய கைவசம் எனது உயிர் இருக்கிறதோ அந்த பரிசுத்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அண்டை வீட்டாரின் கடமையை அல்லாஹ் எவர் மீது கிருபை செய்தானோ அவரைத் தவிர்த்து வேறுயாரும் அறியமாட்டார். (இமாம் கஸ்ஸாலி)

அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: நீங்கள் அல்லாஹ்வின் வணக்கத்தை மேற்கொள்ளுங்கள், அவனுடன் எவ்வஸ்துவையும் இணையாக்க வேண்டாம். தமது பெற்றோர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளவும். அவ்வாறே குடும்பத்தார் உறவினருடனும், அநாதைகளுடனும், ஏழை, எளியோர்களுடனும் மேலும் தனது அருகில் வசிக்கும் அண்டை வீட்டாருடனும், தூரத்தில் வசிக்கும் அண்டை வீட்டார்களுடனும், உங்களுடன் இருக்கும் நண்பர்களுடனும், மேலும் வழிப்போக்கர்களுடனும் அவ்வாறு நடந்து கொள்ளவும். ஸ¤ரா. அந்நிஸா:6

ஹல்ரத் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் அண்டை வீடு எதுவரை உள்ளது? என விசாரித்தார். அதற்கு அவர்கள் நாற்பது வீடுகள் முன்பாக, நாற்பது வீடுகள் பின்பக்கமாக, நாற்பது வலது புறம், நாற்பது இடது புறம்” என பதிலளிதார்கள்.

அன்னை அயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “எனக்கு இரு அண்டை வீட்டார் இருக்கின்றனர். நான் ஏதேனும் அன்பளிப்பு அனுப்புவதாய் இருந்தால் அவ்விருவரில் எவரிலிருந்து ஆரம்பம் செய்வது? எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் எவருடைய தலைவாசல் உனது தலைவாசலுக்கு சமீபத்திலுள்ளதோ அவரிலிருந்து என அருளினார்கள்.

அண்டை அயலான் பசித்திருக்க உண்டு விலாப்புடைப்பவன் விசுவாஷியல்ல. என நபி (ஸல்) கூறியிருப்பதில் பெரிய தத்துவம் உள்ளது. எனவே நாமும் அண்டை அயலாருடன் அன்புடனும், ஒற்றுமையுடனும் வாழப்பழகிக் கொள்வோமாக.



முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்


முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், "நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?'' என (இருமுறை) கேட்பார்கள். "ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: "ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தற்காலத்திலும் எத்தனையோ முஸ்லிமல்லாத வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு அருகில் அவர்கள் உயிர், பொருள், கொள்கை, கெªரவம் காக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் நகரங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமது ஆலயங்களை அமைத்து கொண்டு நிம்மதியாக வாழ்வது இதற்குச் சான்றாகும். குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கற்பித்த நெறியின்படி பிற மதத்தவர் பாதுகாப்பும், உதவியும், உபகாரமும் பெற்று நிம்மதியாக வாழ்கின்றனர்.

விசுவாசிகளே! மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர் களுக்கும் நீங்கள் நன்றி செய்ய வேண்டாமென்றும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளக் கூடாதென்றும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்அன் 60:8)

அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்
அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்களின் இந்த மேன்மையான வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்து அபூஹுரைரா (ரழி) கூறினார்கள்: "தனது அண்டை வீட்டாரில் அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம், அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார். நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டாரின் மனநிலையைக் கவனித்தார்கள்.

சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்
அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஒர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும். ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர். அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.'' (ஸன்னனுத் திர்மிதி)

சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.'' (முஸ்னத் அஹமத்)

நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருதினார்கள். ஸயீது பின் அஸ் (ரழி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம் "இது இந்த வீட்டின் விலையாகும். ஆனால், ஸயீது (ரழி) அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?'' என்று கேட்டார். இதையறிந்த ஸயீது (ரழி) அந்த வீட்டுக்காரருக்கு ஒர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.

இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்பந்தப்பட்ட அழகிய உபதேசங்களைக் கண்டோம். இதோ இப்போது கெட்ட அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களைக் காண்போம்.

தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்
தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி(ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே அவர் யார்?'' என வினவினர். நபி (ஸல்) அவர்கள் "எவருடைய தீங்குகளிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதி பெறவில்லையோ அவர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.''

இது எவ்வளவு பெரிய பாவம்? தனது அண்டை வீட்டாரிடம் தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரிய அருட்கொடையை இழந்துவிட்டார்? "ஈமான்' என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.

உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப் புரிந்துகொண்டு தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை, சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும்; மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரிய துரதிஷ்டம் என்னவாக இருக்க முடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இயம் திடுக்கிட்டுவிடும்.

தீய அண்டை வீட்டானின் நற்செயல்கள் அழிந்து விடும்
தீய குணமுடைய அண்டை வீட்டாரின் நற்செயல்கள் அழிக்கப்பட்டு விடும். அண்டை வீட்டாருக்கு நோவினையளிப்பவரின் நற்கருமங்களுக்கு எப்பலனுமில்லை. ஏனெனில் நற்செயல்கள் அனைத்தும் ஈமான் என்ற தூணின் மீதுதான் நிர்மாணிக்கப்படுகிறது. மேற்கண்ட சான்றுகள் அவனுக்கு ஈமான் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஈமானற்றவனின் எந்த நற்செயலையும் அல்லாஹ் ஒப்புக்கொள்ளாமல் அழித்துவிடுவான் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். அந்த நற்செயல்களுக்காக அவன் வாழ்வனைத்தையும் செலவிட்டிருந்தாலும் சரியே.

நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்மணி இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகலில் நோன்பு நோற்கிறார். தர்மமும் செய்கிறார். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்கிறார்.'' நபி (ஸல்) அவர்கள், "அவளிடத்தில் எந்த நன்மையுமில்லை, அவள் நரகவாதி'' என்றார்கள். நபித்தோழர்கள், "இன்ன பெண்மணி ஃபர்ளான தொழுகையை மட்டும் தொழுகிறாள். பாலாடைக் கட்டியை (மட்டும்) தர்மம் செய்கிறாள்; ஆனால் எவருக்கும் நோவினையளிப்பதில்லை'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவள் சுவனவாசி'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

தீய குணமுடைய அண்டை வீட்டானை "மலடன்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று நபர்கள் மலடர்களாவர். 1) ஒரு தலைவன். நீ அவனுக்கு நன்மை செய்தால் நன்றி செலுத்தமாட்டான்; (அந்த நன்மைக்குப் பிரதிபலனை அவனிடம் எதிர்பார்க்க முடியாது.) நீ தீங்கிழைத்தால் மன்னிக்கமாட்டான் 2) தீய குணமுடைய அண்டை வீட்டான். உன்னிடம் நன்மையைக் கண்டால் மறைத்து விடுவான்; தீமையைக் கண்டால் பகிரங்கப்படுத்துவான் 3) மனைவி, நீ இருக்கும்போது உனக்கு நோவினையளிப்பாள். நீ அவளிடம் இல்லாதபோது உமக்கு மோசம் செய்வாள்.'' (முஃஜமுத் தப்ரானி)

இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விவரித்தது போன்று கெட்ட அண்டை வீட்டாரின் அருவருப்பான உருவம் இறையச்சமுள்ள முஸ்லிமின் சிந்தனையில் தோன்றியிருக்கும். எனவே அவர் தனது அண்டை வீட்டாருக்கு தீமை செய்வதிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார்.

அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்
முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன் மிகக் கவனமாக விலகிக் கொள்வார். எனெனில் அது பெரும் பாவமாகும். ஆதை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி தெளிவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விபச்சாரத்தைப் பற்றி வினவினார்கள். தோழர்கள் "ஹராம்; அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியுள்ளார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ""ஒரு மனிதன் தனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதைவிட பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது பாவத்தால் இலகுவானதாகும்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் திருட்டைப் பற்றி கேட்டார்கள். தோழர்கள் "அது ஹராம். அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஹராமாக்கியுள்ளார்கள்'' என்று கூறினார்கள். அப்போது ""ஒருவன் தனது அண்டை வீட்டில் திருடுவதைவிட வேறு பத்து வீடுகளில் திருடுவது பாவத்தால் இலகுவானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹமத்)

இஸ்லாம் அண்டை வீட்டாருக்கு கெªரவமான அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதை மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களாலும் அவர்களது பண்பாட்டு நெறிகளாலும் அறிந்துகொள்ள முடியாது. மாறாக இச்சட்டங்கள் அண்டை வீட்டாரின் கண்ணியத்தையும் கெªரவத்தையும் மதிக்காமல் வீணடிக்கின்றன. ஆம்! பெரும்பாலும் இவர்கள் அண்டை வீட்டாரின் கெªரவத்தில் விளையாடுவதை மிக இலேசாகக் கருதுகிறார்கள். அதை நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நமது இஸ்லாமின் நற்பண்புகள் நம்மை விட்டு விலகியபோது ஆபாசப் பாடல்கள் நம்மில் பரவ ஆரம்பித்தன. அதில் அண்டை வீட்டாரின் ஜன்னல் காட்சிகளைச் சித்தரிக்கிறார்கள். அது மட்டுமா? கலாச்சார ரீதியாகவும் இவர்களின் கொள்கைப் போரின் அலைகள் நம்மைச் சூழ ஆரம்பித்துவிட்டன.

இதோ வெட்கம் கெட்ட ஒரு அற்பத்தனமான வாலிபன் தனது அண்டை வீட்டுப் பெண்ணை பாட்டில் அமைத்து காதல் தூது விடுகிறான். சீ! இப்படிப்பட்ட அசிங்கத்தை இஸ்லாமுக்கு முந்திய அறியாமைக் காலத்தில் கூட நாம் காணவில்லை. அப்படியிருக்க இஸ்லாமில் அதை எப்படிப் பார்க்க முடியும்?

அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் காப்பது, அவரது கெªரவத்தைப் பேணுவது, அவருக்கு உதவிகள் புரிவது மற்றும் அவரது குறைகளை மறைப்பது, தேவைகளை நிறைவேற்றுவது, அவரது குடும்பப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது, அவருக்குத் தீங்கிழைப்பதிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் மனித சமூகத்தில் மிகச்சிறந்த அண்டை வீட்டுக்காரராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

எனெனில், அவர் திறந்த மனதுடையவராக, சமூகத்தில் அண்டை வீட்டாரின் நிலை குறித்த இஸ்லாமின் கண்ணோட்டத்தை அறிந்தவராக இருப்பார். தனக்கும் அவருக்குமிடையே ஏதேனும் பிரச்சனைகள் தோன்றினால் அதில் ஈடுபடுவதற்கு முன் பலமுறை யோசிப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முதன் முதலாக தர்க்கம் செய்து கொள்ளும் இருவர் அண்டை வீட்டார்கள்தான்.'' (முஸ்னத் அஹமத்)

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்
இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு எற்படுவதை அஞ்சிக் கொள்வார்.

நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். "இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார்; அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்'' என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)

இந்நிலையைச் சந்திப்பது எவ்வளவு பெரிய துரதிஷ்டம்? எல்லோருக்கும் முன்பாக மறுமையில் தனது கஞ்சத்தனத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டுமே! இஸ்லாமியப் பார்வையில் முஸ்லிம்கள் உறுதியாக கட்டப்பட்ட கட்டிடமாவார்கள். இந்த உம்மத்தினர்தான் அதன் கற்கள். ஒவ்வொரு கல்லும் ஒன்றோடொன்று சமமானதாக மற்றோர் கல்லுடன் உறுதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்டிடம் உறுதியானதாகத் திகழும். இல்லையென்றால் அக்கட்டிடம் பலவீனப்பட்டுவிடும்.

இவ்விடத்தில் இஸ்லாம் தனது உறுப்பினரிடையே உயிரோட்டமான இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இஸ்லாம் என்ற அக்கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்கிறது. கால ஒட்டங்களில் ஏற்படும் அதிர்ச்சிகளும், சோதனைகளும் அக்கட்டிடத்தை அசைத்துவிட முடியாது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி மிகச் சிறந்த உதாரணம் ஒன்றைக் கூறினார்கள்:

"ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: "முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஒர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை எற்படுத்தியதாகும்.

அண்டை வீட்டாரின் இடையூறுகளை சகித்துக் கொள்வார்
மாண்புமிக்க மார்க்கத்தால் பிரகாசமான நேர்வழியைப் பெற்றுள்ள முஸ்லிம், தனது அண்டை வீட்டாரின் நடவடிக்கைகளில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். எதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அது விஷயத்தில் கோபம் கொள்ளாமல் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கில் அக்குறைகளை மறந்து மன்னித்துவிட வேண்டும். இவ்வாறு மன்னிப்பது என்ற நற்செயலை அல்லாஹ் வீணடித்துவிட மாட்டான்; அது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும் என்பதை உறுதி கொள்ள வேண்டும்.

இற்குச் சான்றாக அபூதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நீண்ட ஒரு பொன்மொழியை அறிவிக்கிறார்கள். அதில் வருவதாவது "மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் தனது கெட்ட அண்டை வீட்டாரின் நோவினையை சகித்து வாழ்பவர்.''(முஸ்னத் அஹமத், முஃஜமுத் தப்ரானி)

அண்டை வீட்டார் செய்த தீமைக்கு பழிவாங்கமாட்டார்
நபி (ஸல்) கற்றுத்தந்த நற்பண்புகளில் ஒன்று அண்டை வீட்டாரின் தீமைக்கு பழிவாங்காமல் முடிந்த அளவு பொறுமைகாக்க வேண்டும் என்பதாகும். தான் இடையூறு செய்தும் தனது அண்டை வீட்டார் எவ்வித எதிர்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தீமைபுரிபவர் உணர்ந்து கொண்டால் மனம்மாறி தவறுகளிலிருந்து திருந்துவதற்கான வாய்ப்பு எற்படும். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் அதை எதிர்கொள்ள வேண்டும். இதுவே ஒழுக்கப் பயிற்சிக்கான சிறந்த வழிமுறையாகும்.

முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: "(அல்லாஹ்வின் தூதரே!) எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு துன்பமிழைக்கிறார்'' நபி (ஸல்) அவர்கள் "பொறுமையாக இரு'' என்றார்கள். அவர் மீண்டும் வந்து கூறினார்: "எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார்.'' நபி (ஸல்) அவர்கள்: "பொறுமையாக இரு'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கூறினார்: "எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினையளிக்கிறார்.'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(வீட்டிலுள்ள) உமது சாமான்களை எடுத்து வீதியிலே வைத்துவிடு. உம்மிடம் எவரேனும் வந்து காரணத்தை விசாரித்தால் என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார் என்று கூறும். (மக்கள் அனைவரும் அவனை ஏசுவார்கள்; அதனால்) அவர் மீது அல்லாஹ்வின் சாபம் எற்பட்டுவிடும். எவர் அல்லாஹவையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டுக்காரரைக் கண்ணியப்படுத்தட்டும்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

அண்டை வீட்டாரின் உரிமைகளை அறிவார்
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஒவ்வொரு நிலையிலும் தான் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முஸ்லிம் அறிந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் சிரமப்படும்போது அவர்களுக்கு உதவுதல், அவரது வளமையில் மகிழ்வது, அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களில் தானும் மகிழ்ந்திருத்தல், தேவைப்பட்ட உதவிகளைச் செய்வது மற்றும் அவர் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரித்து அறுதல் கூறி உற்சாகப்படுத்துவது போன்ற நற்குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், அண்டை வீட்டார் மரணித்தால் மையித்துக்கான கடமைகளை நிறைவேற்றி அவருக்குப் பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும். அண்டை வீட்டாரின் உணர்வுகளை, அவரது குடும்பத்தாரின் உணர்வுகளை மதிப்பதில் ஒருபோதும் தவறிழைத்துவிடக் கூடாது. இந்நிலையில் ஒரு முஃமின் தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு செய்வதென்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகும்.

இதுதான் அண்டை வீட்டார் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமாகும். இந்த உன்னதமான பண்புகளைக் கற்றுத் தேர்ந்த முஸ்லிமே இஸ்லாமின் கோட்பாடுகளைப் புரிந்தவராவார். அந்தப் பிரகாசமான நேர்வழியை அடைந்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் இஸ்லாமிய சட்டங்களோடு பொருத்திக் கொள்வார். இந்நிலையில் உண்மை முஸ்லிம், மனித சமுதாயத்தில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

Category: 0 comments

தொழுகையின் சிறப்புகள்




தொழுகையின் சிறப்புகள்


இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.


அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.


இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.


தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான். தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.


தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!


அல்லாஹ் கூறுகிறான்:


நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)


ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72


எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170


'நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை'. அல்குர்ஆன் 74:42,43


(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக.இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78


உங்கள் குழந்தைகள் ஏழு வயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.


யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு, அம்ருஇப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : அஹ்மத்


சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.


பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.


கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அல்லாஹு) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்கு மேலானதாகும்.' (ஸஹீஹுல் புகாரி)


தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்: திர்மிதி, அபுதாவூத், அஹமத், இப்னுமாஜா


இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும், உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூ{ஹரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ.






நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், 'இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)


'எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.' பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.' (ஸஹீஹ் முஸ்லிம்)
உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், 'நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: 'நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்' என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரை விட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)


உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: 'இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.' (ஸஹீஹ் முஸ்லிம்)


அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

Category: 0 comments

கலிமாவின் சிறப்பு




'லாஇலாஹ இல்லல்லாஹ்' 

கலிமாவின் சிறப்பு

லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவருக்கு இக்கலிமா என்றேனும் ஒரு நாள் நிச்சயம் பலன் அளிக்கும் (ஈடேற்றமளிக்கும்) அதற்கு முன் அவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்க நேர்ந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தபரானீ)

நான் ஒரு கலிமாவை அறிவேன். ஒருவர் தன் மரண வேளையில் அக்கலிமாவைக் கூறினால் அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இக்கலிமாவின் பரக்கத்தால் ரூஹ் (உயிர்) நிம்மதி பெறும். மேலும் கியாமத் நாளில் அக்கலிமா அவருக்கு ஒளியாகிவிடும். (அதுதான் லாஇலாஹ இல்லல்லாஹு என்னும் கலிமாவாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மஜ்மஉஸ், ஸவாயித்)

லாஇலாஹ இல்லல்லாஹு என்னும் கலிமாவைச்சொல்லி ஒருவர் அவரது இதயத்தில் ஒரு தொலிக் கோதுமை அளவு நன்மை (ஈமான்), அல்லது மணிக் கோதுமை அளவு, அல்லது அணு அளவு ஈமான் இருந்தாலும் அவரும் நரகிலிருந்து வெளியேறிவிடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி)

பூமியிலுள்ள நகரங்கள், கிராமங்கள், பாலைவனங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கூடாரத்திலும் இஸ்லாத்தின் இந்தக் கலிமாவை அல்லாஹுதஆலா நுழையவைத்தே தீருவான்.

இதை ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹுத்தஆலா கலிமா உடையவர்களாக்கி கண்ணியமளிப்பான். ஏற்காதவர்களை இழிவுபடுத்துவான். பிறகு அவர்கள் முஸ்லிம்களுக்கு கட்ப்பட்டு வாழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் மிக்தாதிப்னு அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேலும் யார் என்னைப் பார்த்து என் மீது ஈமான் கொண்டாரோ அவருக்கு ஒருமுறை சுபச் செய்தி உண்டாவதாக! யார் என்னைப் பார்க்காமல் என் மீது ஈமான் கொண்டாரோ அவருக்கு ஏழு (பல) முறை சுபச் செய்தி உண்டாவதாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹமத்)

நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக (தவக்குல்) பாரஞ்சாட்டுவீர்களாயின் அல்லாஹ் பறவைகளுடைய (ரிஸ்க்) தேவையை நிறைவேற்றுவது போல் உங்களுடைய தேவையை நிறைவேற்றுவான். அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன. என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கின்றார்கள் (திர்மிதி)

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் நான் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் எவர் சாட்சி சொல்லி மேலும் அவரது நாவு இந்தக் கலிமா (தய்யிபா)வை அதிகமாகச் சொல்லி மனம் லயித்த இந்தக் கலிமாவால் எவர் உள்ளம் நிம்மதி அடைகிறதோ அத்தகையவரை நரக நெருப்புத் தீண்டாது எஎன்றும் எவர் இக்கலிமாவை உறுதியான உள்ளத்துடன் சாட்சி சொல்லில் நிலையில் மரணமடைகிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத், பைஹகி)

Category: 0 comments

நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.

நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.


அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:


شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.

வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான் இது.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

ரமலான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல்களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமலான்!

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்

நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)

இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது: ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒ ருபர்ளை நிறைவேற்றினால் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க கொடுக்கின்றானோ அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக் கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த தவாபை பழத்தாலோ ஒரு முடர் பாலினாலோ அல்லது ஒரு முடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச் செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.

இன்னுமொரு அறிவிப்பில், எவன் ஒருவன் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறானோ அவனுக்காக மலக்குமார்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் இறைவனிடம் மன்னிப்பு தேடிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மன்னிப்பு தேடுகின்றனர். (ஒரு அறிவிப்பின் படி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லைலத்துல் கத்ர் இரவில் முஸாபஹா செய்கின்றார்கள் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ரமலான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். நூல்:புகாரி, அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.

ரமலானைக் குறித்து 'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு), திர்மிதி-619
'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

ஹதீது குத்ஸியில் வந்திருக்கிறது, ஆதமின் மக்கள் செய்யும் நோன்பைத் தவிர மற்றெல்லா அமல்களும் அவன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாகும். நோன்பு மடட்டும் எனக்குரியது. நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன் என்றும், (பிறிதொரு இடத்தில்) ஏனெனில் ஆதமின் மகன் எனக்காக அவன் ஊண் குடிப்பு மனோ ,ச்சை ஆகியவைகளை விட்டு விடுகின்றான் என்றும், அல்லாஹ் தனித்து பிரித்து கூறியதற்கு கருத்தாவது நோன்புக்கு நன்மை அதிகமாக இருக்கிறது. மற்ற அமல்களெல்லாம் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகுவதுடன் அதற்கும் மேலாக நன்மைகள் கிடக்கும் என்பதாகும். ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

'ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408

'சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

லைலத்துல் கத்ரு இரவின் மகிமைகள்.

லைலத்துல் கத்ரு இன்ன இரவு என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது ஆண்டில் ஓர் இரவு என்றும், பாரஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவு என்றும் ரமலானுடைய இருத்தி ஏழாம் இரவு என்றும் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் ரமலானில் இருபதுக்குமேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும் கூறப்பட்டிருப்பதால் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களும் பள்ளியில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதாவது அந்த ஓரிரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

'லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்' என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது: ரமலானில் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்பதாம் இரவென்பதாகவும், முதல் பிறை திங்கட்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்றாம் இரவென்பதாகவும், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஏழாம் இரவென்பதாகவும், சனிக்கிழமையாக இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவு என்பதாகவும், கூறியுள்ளார்கள். 'இந்தக் கணக்குப் படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தப்பியதே கிடையாது' என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

லைலத்துல் கத்ரு இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவது சுன்னத்:


اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

'யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன், நீ மன்னிப்பை விரும்புகிறாய். ஆகையால், என்னை மன்னித்தருள்வாயாக!'

லைலத்துல் கத்ரு என்று கூறப்பட்டுள்ள 'இன்னா அன்ஜல்னாஹு' என்ற சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடைவ கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்தியேழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே, இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு இரவு என்று சிலர் கூறியுள்ளனர்.

லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்( ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி

லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி,முஸ்லிம்

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி

'எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!'

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்:புகாரி

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்கள்: புகாரி,முஸ்லிம்

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா); நூல்:முஸ்லிம்

'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி,முஸ்லிம்

லைலத்துல் கத்து இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரவில் தராவீஹ்க்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்த அளவு திக்ரு, கிராஅத், தஸ்பீஹ் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

'ரஸூல் ஸலல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவு லைலத்துல் கத்ரு இரவை விட மிகச் சிறந்ததாகும்' என 'மவாஹிபுல்லதுன்னிய்யா' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

Category: 0 comments

அல்லாஹ்வின் பாதையில் செலவு

அல்லாஹ்வின் பாதையில் தருமம் செய்யுங்கள்

ஒரு முஸ்லிமின் வாழ்வு இறைவனின் பொருத்தத் தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றையே இலட் சியமாகக் கொண்டதாகும். இதனால் தான் ஒவ்வொரு முஸ்லிமினதும் எண்ணம், நடத்தை, சொல், செயல் யாவும் இறைவனின் கட்டளைப்படி அமைய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி யுள்ளார்கள்.
இறை திருப்தியை நாடி செலவழிக்கப்படும் செலவுகள் எவ் வாறு அமைய வேண்டும் என்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா வரம்புகளை ஏற்பத்தித் தந்துள்ளான்.
“இறைவழியில் செலவு செய்தல்” பற்றி திருக்குர்ஆனின் 2வது அத்தி யாயமான சூரா பகராவின் 261-265 ஆம் வசனங்களில் பின்வருமாறு கூறப்படுகின்றது. “அல்லாஹ்வின் வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம் ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும்.
அதிலி ருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடுவோருக்கு (அவர்களது நற்செயல்களின் பலன் களை) பன்மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும் யாவற்றை நன்கு அறிந்தவனுமாக இருக்கின்றான்.”
இறைவன் கட்டளையை ஏற்று அவனுக்குப் பணிந்து தருமம் செய் யப்படும் போது தான் செய்யும் பிரதியுபகாரத்தை மிகச் சிறப்பான உவமை ஒன்றின் வாயிலாக யாருக் கும் விளங்கக் கூடிய எளிய நடை யிலே அல்லாஹ் எடுத்துக் காட்டி யுள்ளான்.
தானிய விதை முளைத்து கதிர்கள் தோன்றி அதிலே பல்லாயி ரம் தானிய மணிகள் உற்பத்தியாவது போல உனது செலவுக்குரிய கூலி யைப் பன்மடங்காக்கித் தருவேன் என்று இறைவன் திருமறையில் கூறி யுள்ளதைவிட எது தான் ஒரு இறை நேசனுக்குப் பெரிதாக முடியும்? வேறு ‘எது பற்றித்தான் அச்சம் ஏற்பட முடியும்? இறைவழியில் செலவிடுவது பற்றி கூறும் இதே வசனத்தில் ‘தான் நாடியோருக்குக் கூலி வழங்கு’வதாகச் சொல்லப்படும்.
அச்சொற்றொடர் இடம்பெறுவது பற்றியும் அவதானிப் போம். நாம் இஸ்லாம் கூறியுள்ளமை யால் தான் ஏழைகளுக்காக உதவு கின்றோம். இறைவனுக்காகவே செல வழிக்கிறோம். என்று நினைத்துக் கொண்டிருந்தபோதும் அல்லாஹுத்த ஆலா கூறியுள்ளவாறு அவன் நாடி யவர்களது பட்டியலில் இடம்பெற வேண்டுமே! சில வேளை அவ்வாறு இடம் பெற முடியாத சந்தர்ப்பங்கள் உருவாகக்கூடுமா? என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன; தோன்றுவது இயற்கை.
இப்படியாக ஒரு சந்தேகத்தை உருவாக வைத்த அச்சந்தேகத்துக்கு விடை தரும் வகையில் இதே வசனத் தொடரில் (2:261-265) தொடர்ந்துவரும் இறைவசனங்கள் விளக்கம் தருகின்றன.
“எவர்கள் அல்லாஹ்வுடைய வழி யில் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்த தைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும் (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு உரிய நற்கூலி அவர்களின் அதிபதி யிடம் இருக்கின்றது. மேலும் அவர் களுக்கு எதுவித அச்சமுமில்லை; துயரப்படவுமாட்டார்கள்”.
இதேவேளை ஒருவரது மனதை நோவித்துவிட்டு அள்ளிக் கொடுக்கும் தருமம் கூட இறைவனிடம் செல்லு படியாகாது. அதேவேளை எதையும் வழங்கச் சக்தியற்ற போது அன்பாகப் பேசி திருப்பி அனுப்பும் போது கூட அந்த உறவு தருமமாகிறது. நற்கூலி பெறத் தகுதியாகிறது என்று கூறி எமது நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதையே இவ் வசனங் கள் கூறுகின்றன.
இவற்றிலிருந்து விளங்குவது என்னவெனில் இறைவன் நாடியவர்களது பட்டியலில் இடம்பெற நமது நடத்தையும், நடத்தையை உரு வாக்கும் மனப்பாங்கும் இறைவழி காட்டற்படி அமைய வேண்டும் என்பதே. செல்வத்தின் அளவோ தருமத்தின் அளவோ அல்ல; இறை வனிடம் போய்ச் சேருவது, அது சொற்ப அளவிலாயிருந்தாலென்ன; சொல் அளவிலாயிருந்தாலென்ன, இறைவன் விரும்பும் நடத்தைகளோடு கூடிய தருமமே ஆகும் என்பதை நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு முற்றுப்பெற வில்லை; இறைவழியில் தருமம் செய் வோர் தகைமையைக் கூட்டிக்கொள்ள இன்னும் விளக்கம் தருகிறான்.
அதே வசனத் தொடரின் (2:261-265) “இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் ஈமான் கொள்ளாமல், மனிதர் களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளைச் செய்பவனைப் போல் நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் (மனம்) புண்படச் செய்தும் உங்களுடைய தான தர்மங்களைப் பாழாக்கி விடா தீர்கள்.
அவன் (செய்யும் செயலுக்கு) உவமை மண்மூடிய ஒரு வழுக்குப் பாதையைப் போன்றதாகும். அதன் மீது பெருமழை பெய்து (அதை மூடியிருந்த மண்ணை அடித்துக் கொண்டு போய்) அதை வெறும் பாதையாக்கி விட்டது. இத்தகையவர்கள் செய்யும் தானதர்மங்களால் எதையும் (எந்த நன்மையும்) ஈட்ட முடியாது.
என்ற வசனங்களிலே உலக செல் வாக்கைப் பெறும் நோக்கில் தருமம் செய்பவர்களை எடுத்துக்காட்டி, அவர் களுடன் ஒப்பிட்டு விளக்கி மீண்டும் மனத்தைப் புண்படுத்துவதையும், சொல்லிக் காட்டுவதையும் ஞாபகமூட்டி இறை மறுப்பாளர்களைப் போல் நடந்து கொள்ளாதீர்கள். அவ்வாறு நடந்து கொள்வீர்களானால் நீங்கள் செய்த தருமம் பாழாகி விடும் என்று கூறி நிச்சயமாக அது இறைவனை அடையவே அடையாது என அழுத் தந்திருத்தமாக யாருக்கும் விளங்கும் வகையில் எடுத்துக் காட்டுகிறான்.

Category: 0 comments